ரஷ்யா தொடர்பில் கனடாவின் அதிரடி நடவடிக்கை!
உக்ரைன் நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறினார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 6-வது நாளாக தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பொலாரசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் ரஷ்யா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
ரஷ்யாவின் மோசமான தாக்குதலை கண்டு பல்வேறு நாடுகள் பலவித பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. பல நாடுகள் ரஷிய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்கக்கூடாது என தடை விதித்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது,
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இந்த தேவையற்ற போர் இப்போது நிறுத்தப்பட வேண்டும். உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கிறோம். பீரங்கிகளை தாக்கி அழிக்கும் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் உக்ரைனுக்கு வழங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.