கல்கரியில் நீர் பயன்பாட்டில் வீழ்ச்சி
கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தின் கல்கரியில் நீர் பயன்பாட்டில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் வரையறுக்கப்பட்டுள்ளது.
நீர்த்தட்டுப்பாட்டு நிலை காரணமாக கல்கரியில் அவசரநிலைமை அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் நகரில் 451 மில்லியன் லீற்றர் நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீர் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நகர முதல்வர் ஜொயொட்டி கொன்டெக் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நகரின் இரண்டு இடங்களில் சுத்திகரிக்கப்படாத நதி நீர் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.