கோவிட் தடுப்பூசி குறித்து றொரன்டோ பொலிஸாரின் அறிவிப்பு
கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடமைக்குத் திரும்ப முடியும் என றொரன்டோ பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் பணியில் நீடிக்க முடியாது என்ற சட்டம் றொரன்டோ பொலிஸ் திணைக்களத்தில் அமுல்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
தற்போதைய பெருந்தொற்று நிலைமைகளை கருத்திற் கொண்டு தடுப்பூசி சான்றிதழ் நடைமுறையை நீக்குவதாக றொரன்டோ பொலிஸ் சேவையின் பேச்சாளர் அலெக்ஸ் லீ இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் பெரும் எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்கள் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று குறித்த சுகாதார நடைமுறைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்படும் என றொரன்டோ பொலிஸ் சேவை மேலும் அறிவித்துள்ளது.