இந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வெளியான முக்கிய உத்தரவு! என்ன தெரியுமா?
ஆஸ்திரியாவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐரோப்பியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 லட்சம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுக்குள் வைக்க ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகின்றது.
ஆஸ்திரியாவில் 65 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஒரே நாளில் 13,152 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ள்ளது.
அதனால் தடுப்பூசி போடாதவர்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை ஆஸ்திரியா அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் வீட்டில் இருந்து அலுவலகம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைக்கு மட்டும் செல்ல அனுமதி உள்ளது.
அதே நேரத்தில் மற்ற இடங்களுக்கு சென்றால் அதற்கேற்ப அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அனைவரும் தடுப்பூசி சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.