இந்தியாவில் இரவு பகலாக எரியும் சடலங்கள்! உடனடியாக வெளியேறுங்கள்- அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தம் நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், அங்கு பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அமெரிக்க குடிமக்கள் நாடு திரும்புவதற்கான பயணங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.