ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றமைக்கு அமெரிக்காவே காரணம்; வெள்ளை மாளிகை முன் போராட்டம்!
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதற்கு அமெரிக்காவே காரணம் என ஆப்கன் மக்கள் வெள்ளை மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதனால் நேற்று அங்கு அசாதரண சூழல் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் இந்த சூழலை தலிபான்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானில் ஏற்பட்டுள்ள சூழலுக்கு அமெரிக்காவே காரணம் என அமெரிக்கா வாழ் ஆப்கானிஸ்தான் மக்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களை ஏமாற்றி விட்டார் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
ஆப்கானில் தற்போது ஏற்பட்ட நிலைமைக்கு காரணம் பைடன் மட்டும் என்றும், உலக நாடுகள் ஆப்கானிஸ்தானை கைவிட்டு விட்டதாகவும் போராட்டக்காரர்கள் இதன்போது குற்றம்சுமத்தியுள்ளனர்.