லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அமெரிக்கா - சீனா
அமெரிக்காவும், சீனாவும் எதிர்வரும் 09ஆம் திகதி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என ட்ரம்ப் குற்றம்சாட்டிய நிலையில் சீன பொருட்களுக்கு ட்ரம்ப் அதிக வரி விதிக்க துவங்கினார்.
இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதிக்க, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் துவங்கியது.
பின்னர், இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன.
மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
பின்னர், வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தனது அமைச்சரவையின் பிரதிநிதிகள் எதிர்வரும் 9ம் திகதி லண்டனில் சீன அமைச்சரவையை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.