இது அமெரிக்காவின் போர் பிரகடனம்: ரஷ்ய தளபதி பகீர் குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு அதி நவீன ராக்கெட்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவு உண்மையில் ரஷ்யாவுக்கு எதிரான போர் பிரகடனம் என தெரிவித்துள்ளார் அந்த நாட்டின் முன்னாள் தளபதி ஒருவர்.
அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக நாம் உடனடியாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 72 வயதான Evgeny Buzhinsky என்ற முன்னாள் இராணுவ தளபதியே உக்ரைனுக்கு அதி நவீன ராக்கெட்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவை போர் பிரகடனம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
சோவியத் ஒன்றியம் சிதறும் முன்னரும், அதன் பிறகும் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றியவர் தளபதி எவ்ஜெனி புஜின்ஸ்கி. ரஷ்ய ஆதரவு செய்தி ஊடகம் ஒன்றின் நேரலையில் கருத்து கூறிய அவர், உக்ரைனுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்கும் அமெரிக்காவின் முடிவு ஒருவகையில் மறைமுக போர் பிரகடனம் தான் என்றார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிக்கையில், குறைந்த எண்ணிக்கையிலான நடுத்தர அளவிலான ஆயுதங்களை உக்ரைன் இராணுவத்திற்கு அமெரிக்கா வழங்க இருப்பதை உறுதி செய்திருந்தார்.
ஆனால், ரஷ்யாவை மொத்தமாக தாக்கி அழிக்கும் வகையிலான ஆயுதங்களை அமெரிக்கா ஒருபோதும் உக்ரைனுக்கு வழங்காது எனவும், அது போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அமெரிக்கா வழங்க முடிவு செய்துள்ள ஆயுதங்களை உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்யாவுக்கு எதிராக பயன்படலாம் என்றே தெரிய வந்துள்ளது. இதனாலையே, ரஷ்ய முன்னாள் தளபதி அச்சம் காரணமாக அமெரிக்காவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, உக்ரேன் எல்லைகளை கடந்து தாக்குதலை முன்னெடுக்க அவர்களை நாங்கள் ஊக்குவிக்கவோ அல்லது பலப்படுத்தவோ இல்லை. ரஷ்யாவுக்கு வலியை ஏற்படுத்துவதற்காக மட்டும் போரை நீடிக்க நாங்கள் விரும்பவில்லை என ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார்.