அமெரிக்கா- மெக்சிகோ எல்லை அருகே கோர விபத்து: 15 பேர் பரிதாபமாக பலி!
அமெரிக்கா- மெக்சிகோ எல்லை அருகே நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தக்வல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா - மெக்சிகோ நாடுகளின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 15- பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ எல்லையில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவில் கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டிய பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 6.16- மணியளவில் விபத்து நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 பேருடன் சென்ற எஸ்.யூவி ரக வாகனம் டிரக் சென்று கொண்டிருந்த பாதையில் புகுந்ததாகவும் இதனால் விபத்து நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், நிகழ்விடத்திலேயே 14- பேர் உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மேலும், தீவிர காயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.