அமெரிக்க இராணுவம் ஈரானில் பாரிய போர் நடவடிக்கை; ட்ரம்ப் தெரிவிப்பு
அமெரிக்க இராணுவம் ஈரானில் பாரிய போர் நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்
அதேநேரம், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா வான் மற்றும் கடல் வழியாக ஆரம்பித்துள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க ஈரான் தயாராகி வருவதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிலடியானது மிகவும் கடுமையானதாக (Crushing response) இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.