உயிருக்கு அஞ்சி ஓடிய ஆப்கான் மக்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய அமெரிக்க ராணுவம்!
ஆப்கானிஸ்தான் முற்றுமுழுதாக தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்த மக்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் உயிர் பிழைக்க அஞ்சி ஓடிய மக்களை அமெரிக்கா இராணுவதினர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ஒன்ரு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அங்கிருந்து கடைசியாக புறப்பட இருந்த அமெரிக்க கார்கோ விமானத்தில், 150 பேர் ஏற முடியும். , ஆனால் தம்மை தலிபான்கள் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் பல நூறு பொதுமக்கள் அந்த விமானத்தில் , ராணுவம் வந்து ஏற முன்னரே ஏறி விட்டார்கள். அந்த விமானியும் மக்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்கா செல்ல முடிவு செய்து விட்டாராம்.
இதனால் இதன் காரணமாக அமெரிக்க ராணுவத்திற்கு விமானிகளுக்கு இடையே பெரும் வாய் தர்கம் மூண்டுள்ளது. இது இவ்வாறு இருக்க இங்கேயே சுட்டு உங்களை கொன்று விடுவோம் என்று மிரட்டிய அமெரிக்க ராணுவம், துப்பாக்கிகளை காட்டி ஆப்கான் பொது மக்களை விமானத்தில் இருந்து இறக்கி விட்டு தாம் விமானத்தில் ஏறி தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அதுதொடர்பிலான புகைப்படங்களும் காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

