எரியும் நெருப்பில் அமெரிக்கா எண்ணெய் ஊற்றுகிறது
எரியும் நெருப்பில் அமெரிக்கா எண்ணெய் உற்றுவதாக ரஸ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
உக்ரேய்னுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்குவது தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது.
கடைசி உக்ரேனியரையும் ரஸ்யாவுடன் போரிடச் செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது என ரஸ்ய பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடாத்தாது என கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஜெர்மனி மற்றுமொரு தொகுதி ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கு இணங்கியுள்ளது. அதி நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராடார் கட்டமைப்புக்களை ஜெர்மனிய அரசாங்கம் வழங்க உள்ளது.
போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஜெர்மனி தொடர்ச்சியாக ஆயுதங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.