இஸ்ரேல் பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர்!
இஸ்ரேலுக்கு வருகை தருமாறு அந்நாட்டின் பிரதமர் நாப்தலி பென்னட்(Naphtali Bennett) விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) ஏற்றுக்கொண்டார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “வரும் மாதங்களில் இஸ்ரேலுக்கு வர விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்தார்.
பிரதமர் நாப்தலி பென்னட்(Naphtali Bennett) விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ‘ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை (ஐ ஆர் ஜி சி)’ நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் நேற்று கலந்துரையாடினர்.
“இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டங்களைக் குறைத்து, அமைதியான முடிவை புனித ரமலான் காலத்தில் உறுதி செய்ய வேண்டும்.
இது குறித்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் அதிகாரிகளுக்கு இடையே நடந்து வரும் முயற்சிகள் குறித்தும் அவர்கள் பேசினர்” என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “பைடன், இஸ்ரேலின் உண்மையான நண்பர், அதன் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்.
ஆகவே, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஐஆர்ஜிசியை அவரால் நீக்க முடியாது.
இந்த விவகாரத்தில், ஐஆர்ஜிசி உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு என்பதை இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.