காபூலில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினருக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர்
காபுல் விமானநிலைய தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் உடல்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவற்றினை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது டெலாவேரில் 13 அமெரிக்க படையினரினதும் உடல்கள் திருப்பி அனுப்பப்படும் இடத்திற்கு பைடன் சென்றுள்ளார்.
டோவர் விமானப்படை தளத்தில் அமெரிக்க படையினரின் உடல்கள் கௌரவமான முறையில் இடமாற்றப்படும் நிகழ்வில் பைடன் கலந்துகொண்டார் என கார்டியன் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதியான பின்னர் பைடன் சந்தித்த மிகவும் துயரமான தருணமாக இது காணப்பட்டதாகவும் கார்டியன் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஆப்கானில் மரணமடைந்த 13 வீரர்களின் குடும்பத்தவர்களையும் நான் சந்தித்தேன் என பைடன் தெரிவித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


