தலாய்லாமாவின் உதவியாளரை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்; சீனா கண்டனம்
இந்தியாவிற்கு இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன், தலாய்லாமாவின் உதவியாளர், நாடுகடந்த திபெத் அரசாங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் நடத்திய சந்திப்பிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது அவர், நாடு கடந்த திபெத் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
டெல்லியில் உள்ள திபெத்திய மாளிகையின் இயக்குநர், மதகுரு தலாய்லாமாவின் உதவியாளர், நாடு கடந்த திபெத்திய அரசாங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடனும் தனிப்பட்ட சந்திப்பையும் பிளிங்கன் நடத்தினார்.
இந்நிலையில் இந்த சீனாவை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
அத்துடன் இந்தச் சந்திப்பிற்கு கண்டனம் தெரிவித்து சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் லிஜியன் ஜாவோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "திபெத்திய விவகாரங்கள் முழுவதும் சீனாவில் உள்விவகாரங்கள். அதில், வெளிநாட்டுத் தலையீடுகளை ஏற்கமுடியாது.
சீனாவிலிருந்து திபெத்தை பிரிக்கும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்தான் தலாய்லாமா. அவர், மதகுரு அல்ல" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "சீனாவின் ஒரு பகுதிதான் திபெத், திபெத்தின் விடுதலையையோ, சீனாவிலிருந்து திபெத்தை பிரித்தெடுப்பதையோ ஆதரிக்கவில்லை என்ற அமெரிக்காவின் உறுதிப்பட மறுப்பதாகவே இச்சந்திப்பு உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் அமெரிக்கா வழங்கிய உறுதிப்பாட்டை கடைபிடிக்கவேண்டும்" எனவும் கூறியுள்ளார்.