அமெரிக்காவில் இசைக்கச்சேரியின் போது இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்!
அமெரிக்காவில் இடம்பெற்ற இசைக்கச்சேரி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் நேற்று முன்தினம் (19-06-2022) இடம்பெற்றுள்ளது.
இந்த சமபவம் தொடர்பில் தெரியவருவது,
வாஷிங்டனில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டு இசைக்கச்சேரியை கண்டு களித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த நபர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதில் 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் பொலிஸார் அதிகாரி ஒருவர் உள்பட 7 பேர் பலத்த காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.