அமெரிக்காவில் பல்கலை மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை விர்ஜீனியா பல்கலைக்கழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் நடந்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என விர்ஜீனியா பல்கலைக்கழக நிர்வாக தலைவர் ஜிம் ரியான் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தின் அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்தேகிக்கப்படும் குற்றவாளியான கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டதுடன் அவரை தீவரமாக தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.