மனைவியின் வெட்டிய தலையுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றிய கணவர்!
மனைவி வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கருதி கோபத்தில் மனைவியில் தலையை துண்டித்து கணவர் மோட்டார்சைக்கிளில் சுற்றித்திரிந்த கொடூர சம்பவம் கம்போடியாவில் நடந்துள்ளது.
கம்போடியாவின் நோம் பென் பகுதியை சேர்ந்தவர் புவோங் ராதா (27). இவரது மனைவி லை ஸ்ரீ நௌச் (23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தனது மனைவிக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கருதிய அவர், மனைவியை கொலை செய்து, லையின் தலையை ஒரு வெள்ளை சாக்கில் திணித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று அருகில் உள்ள தரிசு நிலத்தில் வீசியுள்ளார்.
இந்த நிலையில் அண்டைவீட்டு நபர் அவர்கள் வீட்டுக்கு சென்று பார்வையிட, அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இதனையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 60 மைல்கள் தொலைவில், புவோங் ராதா பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மனைவியின் தலையை வெட்டியதன் காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் ஒருமுறை கூட மனைவியை காயப்படுத்தவோ தாக்கவோ இல்லை என கூறிய புவோங் ராதா, தன்னை அவர் ஏமாற்றுவதை தாங்க முடியாமல் கழுத்தை துண்டித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் புவோங் உண்மையில் தமது மனைவியை பலமுறை துன்புறுத்தியுள்ளதாகவும், கோபத்துடன் கத்திப்பேசுவதை பலமுறை கேட்டுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் லை மீதான இந்த தாக்குதல் கோபம் மற்றும் பொறாமையால் நடந்துள்ளது எனவும், தொடர்புடைய நபர் கைதாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.