தடுப்பூசி கட்டாயம்: தவறினால் அபராதம்; எங்கு தெரியுமா?
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இந்த உத்தேச திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவும் அரசு தீா்மானித்துள்ளது.
குறித்த மசோதா சட்ட வடிவம் பெற்ற பின்னா், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனரா? என்பது குறித்து வழக்கமான பரிசோதனையின்போது பொலிஸார் சோதனை செய்வாா்கள். அத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களுக்கு அதுகுறித்த நினைவூட்டுதல் அனுப்பப்படும்.
அதன்பிறகும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு தகவல் அனுப்பப்படும்.
அதனையும் மக்கள் பின்பற்றப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.