பள்ளி வளாக கல்லறை விவகாரம்: உடைத்து பேசிய வான்கூவர் கத்தோலிக்க பேராயர்
கம்லூப்ஸ் முன்னாள் இந்திய பள்ளி கல்லறை விவகாரம் தொடர்பில் வான்கூவர் கத்தோலிக்க பேராயர் மன்னிப்பு கோரியுள்ளார்.
வான்கூவர் கத்தோலிக்க பேராயர் மைக்கேல் மில்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கொடூரமான சம்பவத்தை கேள்வியுற்று பதறிப்போயுள்ள குடும்பங்களுக்கும் சமூகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் மன்னிப்பையும் கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு முறை துயரச் சம்பவங்கள் வெளிக்கொண்டுவரப்படும் போது அல்லது பாதிக்கப்பட்ட இன்னொருவர் முன்வரும் போது, எண்ணிலடங்காத வலிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
அந்த வலிகள் மீண்டும் துயரத்தை அளிப்பதை நான் அறிவேன் எனவும் பேராயர் மில்லர் சுட்டிக்காட்டியுள்ளார். 2013ல் ஒருமுறை இந்த விவகாரம் தொடர்பில் தாம் மன்னிப்பு கோரியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள பேராயர் மில்லர்,
அப்போது உறுதி அளித்தது போலவே இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வான்கூவர் கத்தோலிக்க சபைக்கு உட்பட்ட, உண்டுறை பள்ளிகள் தொடர்பான அனைத்து தரவுகளையும் வெளியிட தாம் தயாராக இருப்பதாகவும்,
எஞ்சிய கத்தோலிக்க சபைகளும் இதே நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.