கனடாவில் பொலிசாரின் மோசமான செயல்!
கனடாவின் பகுதியில் பொலிஸ் வாகனம் ஒன்று பாதசாரி மீது மோதும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிசாரின் வாகனமே இவ்வாறு பாதசாரியின் மீது மோதுண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவத்தில் பாதசாரி படுகாயம் அடைந்துள்ளார்.
பொலிஸ் த்தியோகத்தர்கள் மிக வேகமாக வாகனத்தைச் செலுத்தி பாதுசாரிய ஒருவர் மீது மோதியமை அதிர்ச்சி அளிப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் மணிக்கு 30 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வாகனங்கள் பயணிக்க வேண்டும் என்ற சட்டம் காணப்பட்ட போதிலும் குறித்த பொலிஸ் வாகனம் மிக வேகமாக பயணித்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதசாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கிலேயே இவ்வாறு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த பொலிஸ் வாகனம் இந்த வேக கட்டுப்பாட்டை மீறி பயணித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதசாரியை கண்டவுடன் போலீஸ் வாகனம் ஏன் நிறுத்தப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் எவ்வித கவனமும் இன்றி இவ்வாறு வேகமாக வாகனத்தை செலுத்தியமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகன விபத்து சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்த சிலர் போலீசார் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் நோக்கில் செயற்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.