வான்கூவர் சாலையில் பலியான குழந்தை: சாட்சிகளை தேடும் பொலிஸ்
வான்கூவர் சாலையில் வாகனம் மோதி பரிதாபமாக பலியான 23 மாத குழந்தை தொடர்பில் பொலிசார் முக்கிய கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
விபத்தில் தொடர்புடைய டெஸ்லா வாகன சாரதியிடம் நடந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்படும் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கமெராவில், விபத்து தொடர்பான காட்சிகள் பதிவாகியிருக்கும் எனவும் பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஜூலை 6ம் திகதி சுமார் 6 மணியளவில் Ford Escape வாகனம் ஒன்று McLaren வாகனம் மீது மோதிய சம்பவத்தில், ஒரு வாகனம் தூக்கி வீசப்பட, அது குழந்தையுடன் நடந்து சென்ற 31 வயது பாதசாரி மீது மோதியது.
இதில் அந்த குழந்தை பரிதாபமாக பலியானது. அதன் தந்தை காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
துரதிர்ஷ்டவசமாக, குறித்த கோர விபத்தை, பலியான குழந்தையின் தாயாரும் நேரில் பார்த்துவிட்டு தான் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
இதன் பின்னரே, விபத்தில் தமது பிள்ளையும் கணவரும் சிக்கிக்கொண்டது அவருக்கு தெரிய வந்துள்ளது.