கொரோனா அறிகுறி... வாகன் பெற்றோர் மீது வழக்கு
கொரோனா அறிகுறிகளுடன் காப்பகத்திற்கு குழந்தையை அனுப்பி வைத்த வாகன் பெற்றோருக்கு பெருந்தொகை பிழை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி நடந்துள்ளதாக யார்க் பிராந்திய பொது சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. மேலும் அந்த தம்பதி பிராந்தியத்தின் பிரிவு 22ஐ மீறி கொரோனா அறிகுறிகளுடன் குழந்தையை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மொத்தம் 880 டொலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குறித்த காப்பகத்தில் 15 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
யார்க் பிராந்திய அதிகாரிகள் அந்த குழந்தையின் பெயர், காப்பகத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்களை இதுவரை வெளியிடவில்லை.
நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் யாராவது ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால், எதிர்மறை சோதனை வரும் வரை நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.