கட்டுப்பாட்டை இழந்த வாகனம்... பரிதாபமாக பலியான சகோதரர்கள்: இளம் சாரதி மீது கொலை வழக்கு
ஒன்ராறியோவின் வாகன் பகுதியில் வாகனம் மோதிய சம்பவத்தில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சகோதரர்கள் இருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் டஃபெரின் தெருவுக்கு அருகில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று 4 வயது சிறுவன் மற்றும் அவரது 10 வயது சகோதரி உட்பட மூவர் மீது வேகமாக மோதியுள்ளது.
பொலிசார் வெளியிட்ட தகவலின்படி, இரு சிறுவர்களும் தங்கள் பைக்கில் அப்பகுதியில் வட்டமிட்டுக்கொண்டிருந்ததாகவும், அப்போது பைக்கின் சங்கிலி சிக்கிக்கொள்ள அண்டை வீட்டார் ஒருவர் சிறுவர்கள் இருவருக்கும் உதவ முன்வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மூவர் மீதும் பலமாக மோதியுள்ளது. இதனையடுத்து, பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் சிறார்கள் உட்பட மூவரும் மருத்துவமனைக்கு சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் இறந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 16 வயதேயான வாகன சாரதியை சம்பவ இடத்தில் வைத்தே பொலிசார் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.
தற்போது சிறுவர்கள் இறந்த நிலையில், சாரதி மீது கொலைக்குற்றத்திற்கு நிகரான வழக்குகள் பதியப்படலாம் என்றே கூறப்படுகிறது.