கனடாவை உலுக்கிய மூவர் கொலை வழக்கில் வெளியாகும் முக்கிய தீர்ப்பு
கனடாவின் ரொறன்ரோவில் தாயார் மற்றும் அவரது இரு பிள்ளைகளையும் கொலை செய்த குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்ட நபருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் நடந்த இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள 33 வயது Cory Fenn மீதான மூன்று கொலை வழக்கும் நிரூபிக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
அரசு தரப்பு முன்வைத்துள்ள வாதத்தில், 2018 மார்ச் மாதம் 14ம் திகதி Cory Fenn இந்த மூன்று கொலையையும் செய்துள்ளார் என்றே குறிப்பிட்டுள்ளது. 39 வயதான Krassimira Pejcinovski தன்னுடனான உறவை முறித்துக்கொண்ட ஆத்திரத்தில், அவரையும் அவர் பிள்ளைகள் இருவரையும் Cory Fenn கொலை செய்துள்ளார்.
குறித்த தாயாரும் மகளும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். 15 வயது சிறுவன் ராய் கழுத்தை நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
ஆனால், அந்த குடும்பத்தை கொலை செய்யும் அளவுக்கு தமக்கு துணிவு இல்லை என குறிப்பிட்டுள்ள Cory Fenn, தமக்கான சட்டத்தரணியை வைத்துக் கொள்ளவில்லை.
நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ள சட்டத்தரணி இந்த வழக்கு தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அந்த நபரே மூன்று கொலையும் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தமக்கான வாதங்களை அந்த நபரே முன்வைத்து வந்துள்ளார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தாமதமாகிவந்த தீர்ப்பு, இன்று அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதால் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.