“வெற்றி நமதே” உக்ரைன் அதிபர் சூளுரை
ரஸ்யாவிற்கு எதிரான போரில் வெற்றி நிச்சயம் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலன்ஸ்கீ தெரிவித்துள்ளார்.
“உக்ரைன் படையினர், நாட்டு மக்கள் அனைவரும் இங்கிருக்கின்றார்கள், நூறு நாட்கள் உக்ரைனை காத்துள்ளோம், வெற்றி நிச்சயம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் கியூவில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 25ம் திகதி உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல் நடாத்த ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த போரில் வெற்றியாளர் எவரும் இருக்கப் போவதில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனர்த்த இணைப்பாளர் அமின் அவாட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனவும், சமாதானமே தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.