கிராமங்களுக்குள் புகுந்து மக்கள் மீது கொடூர தாக்குதல்: 43 பேருக்கு நேர்ந்த சோகம்
நைஜீரியாவில் சமீபகாலமாக போகோஹரம் பயங்கரவாதிகள் கிராமங்களுக்குள் புகுந்து மக்களை கொடூரமாக கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) இரவு போகோஹரம் பயங்கரவாதிகள் சோகோட்டோவில் உள்ள கோரோனியோ நகருக்குள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியதில் 30 பேர் கொன்று குவித்தனர்.
இதேவேளை நேற்று முன்தினம் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மோட்டார் சைக்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு பயந்து வீடுகளுக்குள் சென்று கதவை மக்கள் பூட்டிக்கொண்ட போதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.