ரொறன்ரோவில் தோழியுடன் சென்ற இளைஞருக்கு கும்பலால் நேர்ந்த துயரம்
ரொறன்ரோ தீவில் கடந்த சனிக்கிழமை தோழியுடன் சென்ற 24 வயது இளைஞரை தன்பால் ஈர்ப்பாளர் என கூறி கும்பல் ஒன்று கடுமையாக தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் படகு நிறுத்தும் இடத்தில் தமது 27 வயது தோழியுடன் குறித்த 24 வயது இளைஞர் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி அந்த கும்பலில் ஒருவர், இந்த இளைஞரை தன்பாலின ஈர்ப்பாளர் என கிண்டலடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த கும்பல் குறித்த இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞர் David Gomez என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த இளைஞரே தமக்கு நேர்ந்த துயர சம்பவம் தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முகத்தில் குத்துவிட்டு மூக்கை உடைத்ததாகவும், முகம் சிதைந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி ஆபத்தான சூழலில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது வழக்கு பதிந்துள்ள பொலிசார், David Gomez தாக்கப்பட்ட வழக்கில் மூவர் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதில் ஒருவர் பெண் எனவும், ஒருவர் கருப்பின இளைஞர் எனவும், இன்னொருவர் வெள்ளையர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தகவல் தெரியவரும் பொதுமக்கள் இந்த விவகாரத்தில் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.