இரு பிரபல நாட்டின் அதிபர்களை சந்தித்த விளாடிமிர் புடின்!
ரஷ்யா தொடுத்து வரும் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும், போர் நடத்திவரும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.
இதற்கிடையே, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளைச் சமாளிக்க ஆசியா, வளைகுடா நாடுகளுடனான உறவை வலுப்படுத்த ரஷ்யா முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார்.
அங்கு ஜனாதிபதி புடின் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி, ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மற்றும் துருக்கி அதிபர் தையூப் எர்டோகன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தற்போது ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.