இரண்டு பெண்களிடம் அத்துமீறியதாக கனடா மருத்துவர் மீது குற்றச்சாட்டு: அவர் எடுத்துள்ள முடிவு
கனடாவில் மருத்துவர் ஒருவர் மீது இரண்டு பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, அவர் தனது மருத்துவர் உரிமத்தை ஒப்படைத்துள்ளதுடன், இனி கனடாவிலோ வேறு எங்குமோ மருத்துவ தொழில் செய்வதில்லை என உறுதியளித்துள்ளார்.
வின்னிபெக்கில் வாழும் Nihad Nagy William என்ற மருத்துவரிடம், ஒரு பெண் மருந்துகள் பரிந்துரை பெறுவதற்காக சென்றபோது, அவர் அந்த பெண்ணை தவறாக தொட்டதாக புகாரளித்துள்ளார்.
மற்றொரு பெண், எக்சிமா பிரச்சினைக்காக மருத்துவர் Nihadஐ சந்திக்க சென்றபோது அவரையும் அந்த மருத்துவர் தவறாக தொட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தனது மருத்துவர் உரிமத்தை மனித்தோபா மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியில் Nihad ஒப்படைக்க, அது நிரந்தரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இனி அது ஒருபோதும் திரும்பக் கொடுக்கப்படாது என்றும் கல்லூரி கூறிவிட்டது. இதற்கிடையில், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்
Nihad.
அத்துடன், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவும் இல்லை என கல்லூரி தனது முடிவில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.