அதிகரிக்கும் போர் பதற்றம்; உக்ரைனுடனான விமான போக்குவரத்து ஸ்தம்பிதம்!
உக்ரைன் மீது ரஷ்யா விரைவில் படையெடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக உக்ரைனுடனான விமான போக்குவரத்தை சில நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
அதன்படி டென்மார்க் விமான நிறுவனமான கே.எல்.எம். மறு அறிவிப்பு வரும் வரை உக்ரைனுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரேனிய எயார்லைன் ஸ்கைஒப் நிறுவனத்தின் அயர்லாந்து குத்தகைதாரர் உக்ரேனிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை செய்வதாக அறிவித்ததை அடுத்து போர்த்துகல்லில் இருந்து உக்ரைனின் கீவ் நகருக்கு சென்ற விமானம் மால்டோ வன் தலைநகர் சிசினாவுக்கு திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேபோல் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது குடி மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளன. தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.