அமெரிக்கா மக்களுக்கு எச்சரிக்கை!
அமெரிக்காவில் சென்ற வாரம் மத்திய வட்டாரத்தின் பெரும்பகுதியைப் பொசுக்கிய அனல்காற்று இப்போது கிழக்குநோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்த நகர்வு வெப்பநிலையைக் கணிசமாக உயர்த்துமென வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் 38 டிகிரி செல்சியஸுக்கு மேற்பட்ட வெப்பத்தால் பாதிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனல்காற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுவோர் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் கிழக்கு, தெற்கு வட்டாரங்களில் முன்னெப்போதும் இல்லாத வெப்பம் பதிவாகலாம் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதேவேளை நியூ ஜெர்ஸி (New Jersey) மாநிலத்தின் தென்பகுதியில் சுமார் மூவாயிரம் ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பகுதியைக் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.