நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை ; டொனால்ட் டிரம்ப் கடும் விமர்சனம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேட்டோ அமைப்பை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், “நேட்டோ எங்களுக்குத் தேவையில்லை; அவர்களுக்குத்தான் நாங்கள் தேவை” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான சமீபத்திய நிலவரத்தை குறிப்பிட்டு நேட்டோவின் பங்கு குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிரம்ப் கூறுகையில், நேட்டோவிலிருந்து தமக்கு தொடர்பு கொண்டு உதவி குறித்து கேட்டதாகவும், ஆனால் “இப்போது எங்களுக்கு உங்கள் உதவி தேவையில்லை” எனத் தெரிவித்ததாகவும் கூறினார்.
கடந்த காலங்களில் அமெரிக்காவுக்கு உதவி தேவைப்பட்டபோது நேட்டோ பயனற்றதாக இருந்தது எனவும் அவர் விமர்சித்தார்.
மேலும் தனது சமூக ஊடகப் பதிவுகளில், நேட்டோவை “காகிதப் புலி” எனக் குறிப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார்.
அதேவேளை, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான 10 நாள் போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அறிவித்துள்ளது.
எனினும், தற்காலிக போர்நிறுத்தம் முடியும் வரை மட்டுமே இந்த அனுமதி அமலில் இருக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.