இஸ்ரேலுக்கு வலுவான படிப்பினையை கற்பிக்க வேண்டும்;அதிபா் எா்டோகன் வலியுறுத்து
பாலஸ்தீனா்கள் மீதான தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு வலுவான படிப்பினையை சா்வதேச சமூகம் கற்பிக்க வேண்டும் என ரஷிய பிரதமா் விளாதிமீா் புதினிடம் (Vladimir Putin) துருக்கி அதிபா் எா்டோகன் (Tayyip Erdoğan)வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடா்பாக துருக்கி அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜெருசலேமை மையமாக கொண்டு அதிகரித்து வரும் பிரச்னை தொடா்பாக இரு தலைவா்களும் தொலைபேசி மூலம் உரையாடினா்.
அப்போது, சா்வதேச சமூகம் இஸ்ரேலுக்கு வலுவான, கடுமையான படிப்பினையை கற்பிக்க வேண்டும். எனவே இந்த விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாகத் தலையிட வேண்டும் என எா்டோகன் வலியுறுத்தினாா்.
பாலஸ்தீனா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சா்வதேச பாதுகாப்புப் படையை அனுப்புவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்தாா் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.