இப்போதைக்கு மாஸ்க் அணிவதுதான் நல்லது... கனேடிய நகரம் ஒன்று அறிவிப்பு
இப்போதைக்கு மாஸ்க் அணிவதுதான் நல்லது என கனேடிய நகரம் ஒன்றின் சுகாதாரத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
கனேடிய தலைநகரான Ottawaவில் இன்னும் 30 சதவிகிதம் மக்கள் முழுமையாக கொரோனாவுக்கெதிராக தடுப்பூசி பெறாத நிலையில், அங்கு அதிகம் பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா வைரஸும் காணப்படுவதையடுத்து, மிக அதிக அளவு அபாயம் உள்ளதாக தெரிவிக்கிறார் Ottawaவின் சுகாதாரத்துறை அமைச்சரான Vera Etches.
சமீபத்தில் ஆல்பர்ட்டாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலும், ஆல்பர்ட்டா மாகாண தலைமை மருத்துவ அலுவலரான Dr. Deena Hinshaw, கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க இருப்பதாக அறிவித்துள்ளதை பலரும் கேள்விப்பட்டிருக்கலாம்.
ஆனால், பிரித்தானியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸால் மீண்டும் தொற்று அதிகரித்து வருவதை தாங்கள் உற்று கவனித்து வருவதாக Ottawaவின் சுகாதாரத்துறை அமைச்சரான Vera Etches தெரிவிக்கிறார்.
ஆகவே,மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டதை உறுதி செய்துகொள்வதுடன், கூடவே மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி முதலான கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றுவது நல்லது என்கிறார் அவர்.