வெளிநாடொன்றில் களைகட்டிய நவராத்திரி வழிபாடு!
நைஜீரியாவில் நவராத்திரி வழிபாடு அக்டோபர் 6ம் தேதி கலச ஸ்தாபனம் செய்து ஐசிஏ வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கோலாகலமான துவங்கியது.
7ம் தேதி நவராத்திரி வைபவங்கள் தொடங்க நகரவாசிகள் மனதில் உற்சாகம் ததும்ப வழிபாடு செய்தனர். கடந்த சனிக்கிழமை அக்டோபர் 9ம் தேதி கோயிலும் திறந்துவிட குளிர நவராத்திரி வழிபாடுகள் களைகட்டியுள்ளன.
9 நாளும் பாராயணமாக லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் கீர்தனைகளை பெண்களும், குழந்தைகளும் பாடி துர்க்கையை வழிபட்டனர். இம்முறை அம்மன் பல வகையான அலங்கார வாகனங்களில் பவனி வந்தாள்.
கஜ வாஹினி, சிம்ம வாகினி, மயூர வாகினி, கோமாதா பவனி, அன்ன பக்ஷி என அழகான அலங்காரங்களில் சிவகுமார் சிவாச்சாரியார் மெருகேற்றி இருந்தார்.
கடந்த 10 வருடமாக நவராத்திரியை சிறப்பாக செய்துவரும் கோயில் குழுமம் இந்த வருட அலங்காரத்துடன் சேர்த்து மொத்தம் 63 அம்பாள் அலங்காரம் செய்திருக்கின்றனர். இதில் ஒவ்வொன்றும் ப்ரத்யேக அலங்காரம், மீண்டும் செய்யப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.