உலகெங்கிலும் நடத்தப்படும் வினோதமான திருமண சடங்குகள்
உலகெங்கிலும் மக்கள் தங்களது மதம், கலாச்சாரம், இனம் ஆகியவற்றை பொறுத்து விதவிதமான திருமண சடங்குகளை பின்பற்றி வருகின்றனர். அதில் சில சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்கள் நம்மை மிரளவைப்பதாகவும், ஆச்சர்யப்படுத்துபவையாகவும், சில பய முறுத்தும் வகையிலும் காணப்படுகின்றது.
ஜூட்டா சுபாய் சடங்கு என்பது இந்தியத் திருமணங்களில் இது குறும்புத்தனமான சடங்கு ஆகும். திருமணத்தின் போது மணமகனின் காலணியை மணமகளின் சகோதரன் மற்றும் சகோதரிகள் இணைந்து மறைத்துவைத்துவிடுவார்கள். காலணியை அவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்றால் தனது மச்சினன் அல்லது மச்சினிக்கு மணமகன் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
மரத்துடன் திருமணம் என்பது செவ்வாய் தோஷம் அல்லது நாக தோஷம் இருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் தனது திருமணத்திற்கு முன்னதாக ஒரு வாழை மரத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த மரத்தை வெட்டி விடுவார்கள். இது எதற்கு என்றால் தோஷம் உள்ள பெண்ணை மணக்கும் கணவர் இறந்துவிடுவார் என்பதால், வாழை மரத்தை முதலில் மணமகனாக பாவித்தி திருமணம் செய்து வைக்கின்றனர். அந்த மணமகன் இறந்து போனதாக காட்ட அதனை வெட்டி விடுவது சம்பிரதாயம் ஆகும் என்று கூறப்பட்டு வருகிறது.
அழுகை சடங்கு என்பது சீனாவில் ஒரு சில பகுதிகளில் திருமணத்திற்கு முன்பு மணமகள் கண்ணீர் விட்டு அழுவது ஒரு சடங்காகவே பின்பற்றப்படுகிறது. இந்த சடங்கின் படி, திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக சீன முறைப்படி துஜியா என அழைக்கப்படும் மணமகள், தினமும் ஒவ்வொரு மணி நேரம் அழ வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
முகம் மற்றும் உடலில் கருப்பு நிறம்பூசுவது: ஸ்காட்லாந்தில் ஒரு பாரம்பரியம் உள்ளது திருமணத்திற்கு முன்னதாக மணமகனும், மகளும் முகம் மற்றும் உடல் பகுதிகளில் கருப்பு நிறம் பூசப்பட்டு, தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த சடங்கு மணமக்களை தீய ஆவிகளிடம் இருந்து காக்கும் என நம்பப்படுகிறது.