ஏரியில் நீச்சலின் போதும் மாயமான 8 வயது சிறுவன்: தெரிய வந்த துயர சம்பவம்
ஒன்ராறியோவில் ஏரியில் நீந்திக் கொண்டிருந்தபோது காணாமல் போன எட்டு வயது சிறுவன், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாகாண பொலிசார் அறிவித்துள்ளனர்.
சனிக்கிழமை பகல் Turkey Point பகுதியிலேயே சிறுவன் நீந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவசர உதவிக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி கோரியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த சிறப்பு குழுவினர் தீவிரமாக தேடியும் சிறுவன் தொடர்பில் ஏமாற்றமே மிஞ்சியது.
இதனையடுத்து Cedar Drive பகுதியில் கரையில் இருந்து 200 மீற்றர்கள் தொலைவில் சிறுவனின் சடலம் ஞாயிறன்று சுமார் 2.30 மணியளவில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட பின்னரே, சிறுவன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியிட முடியும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
நீச்சலடித்துக் கொண்டிருந்த சிறுவன் மாயமானதாக குடும்ப உறுப்பினர்களே அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.