ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியருக்கு நேர்ந்த கதி!
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானியர் ஒருவர் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட உள்ளார்.
பெர்லினிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றியவர் David Smith (57).
அவர், ரஷ்ய உளவாளிகளுக்கு பிரித்தானிய அதிகாரிகளின் பெயர்கள் முதலான சில தகவல்களைக் கொடுத்து, அதற்கு பதிலாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
அத்துடன் பொலிசார் அவரது வீட்டை சோதனையிட்டபோது, அங்கு ரஷ்ய கொடி, சோவியத் இராணுவ தொப்பிகள் மற்றும் இராணுவ வரலாறு மற்றும் ஏராளமான ரஷ்ய மொழிப் புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த வருடம் கைது செய்யப்பட்ட அவரை நாடுகடத்துவதென முடிவான நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் Smith. அவர் 16 ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்துவருவதாகவும், ஜேர்மனியை தன் தாய் நாடாக கருதுவதாகவும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதிட்டார்.
எனினும் , அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாததால் அவர் பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.
அதேவேளை இன்று பிரித்தானியாவுக்குக் கொண்டுவரப்படும் Smith, வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.