புளோரிடாவில் அதிகாரிகளின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தவருக்கு நேர்ந்த கதி!
அமெரிக்கா புளோரிடாவில் உள்ள மைதானத்தின் ஏரியில் முதலை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 47 வயதான குறித்த நபர் புளோரிடாவின் லார்கோவில் உள்ள Taylor Park Disc Golf மைதானத்தின் ஏரியில் தண்ணீரில் தேடுதல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
ஏரி குறித்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கப்பட்டு இருந்த போதும், அவர் ஏரியில் இறங்கியதாக கூறப்படுகின்றது. ஏரியில் அவர் , நாய்களுக்கு விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டை அவர் தேடிக்கொண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் ஏரியில் டைவ் செய்து, பிளாஸ்டிக் தட்டுகளை வெளியில் எடுத்து அவற்றின் தரத்திற்கு ஏற்ப அவற்றை சிலர் விற்கும் பணியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த நபரின் மரணம் முதலையால் ஏற்பட்டது என்பது நிபுணர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், 2019-க்குப் பிறகு புளோரிடாவில் இதுவே முதல் அபாயகரமான முதலை தாக்குதலாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.