இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்துமாம்! உஷாரா இருங்க
Cancer
stomach pain
Digestive disorder
By Kishanthini
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்ப்பில் பலருக்கு உள்ளது.
சில சமயங்களில், நாம் திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
பழமையான உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது அந்த உணவுகள் என்ன? அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- சமைத்த உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைப்பது தவறு. அதனை மீண்டும் சூடுபடுத்தினால் அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும். மேலும் செரிமான கோளாறுகளை உருவாக்கும்.
- காளானில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அதனை மறுபடியும் சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறும். இது செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும். எனவே காளானை சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது.
- சிக்கன் உணவுகள் சிக்கன் குழம்பு இவைகளை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இது உங்களுக்கு கடுமையான செரிமான பிரச்சினைகளை உருவாக்கும். மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
- பழைய கீரையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இதனால் அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து போகும். இதன் விளைவாக புற்றுநோய் அபாயம் ஏற்படும்.
- பீட்ரூட்டை சூடுபடுத்துவதால் கீரையை போலவே, பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டும் அழிந்து போகும். எனவே பீட்ரூட்டை சமைத்த உடனே சாப்பிடுவது நல்லது.
- முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது.முட்டையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதில் உள்ள புரத சத்தின் கூறுகள் முற்றிலும் மாறுபடும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US