இந்தியர்களுக்கு வாழ்த்துக்கூறிய வெள்ளை மாளிகை!
குடியரசு தினத்தை கௌரவிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் நாங்கள் இணைவதில் நாங்கள் பெரும் மகழ்ச்சி அடைகிறோம் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தினத்தையொட்டி இந்திய மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்தியா-அமெரிக்கா கூட்டணி மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியப் பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்குச் வந்தபோது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு வலுவாகவும், நெருக்கமாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டும் என அதிபர் ஜோபிடன் கூறியதுடன், அது முழு உலகிற்கும் பயனளிக்கும் என்றும் பிடன் குறிப்பிட்டதையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அங்குள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடியும் ஏற்றப்படவுள்ளது.