புகைப்படம் வெளியிட்டு வின்னிபெக் பொலிசார் விடுத்த கோரிக்கை
முதியவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய வழக்கில் நபர் ஒருவரை வின்னிபெக் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மவுண்டன் அவென்யூ மற்றும் மெக்ரிகோர் தெருவில் கடந்த ஜூன் 21ம் திகதி இரவு சுமார் 9.40 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான 70 வயது கடந்த முதியவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காயங்களுக்கான சிகிச்சையை முன்னெடுத்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த காட்சிகளில் இருந்து புகைப்படங்களை சேகரித்த பொலிசார், தற்போது பொதுமக்களின் உதவி கோரி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
அந்த நபர் தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.