36 ஆண்டு அசாத்திய நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு; கனேடியர் ஒருவருக்கு பேரதிர்ஷ்டம்!
கடந்த நான்கு தசாப்தங்களாக ஒரே இலக்கத்தை தெரிவு செய்து லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்று வந்த கனேடியர் ஒருவருக்கு பேரதிர்ஷ்டம் கிடைக்கப் பெற்றுள்ளது.
ஸ்காப்ரோ பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் டிக்ஸன் என்ற நபர் கடந்த 36 ஆண்டுகளாக லத்தர் சீட்டு இலுப்பில் பங்கேற்று வருகின்றார்.
அண்மையில் நடைபெற்ற சீட்டெளிப்பில் டிக்சன் 20 மில்லியன் டாலர்கள் பரிசாக வென்றுள்ளார்.
கடந்த 36 ஆண்டுகளாகவே ஒரே குறிப்பிட்ட எண்களை தனது தெரிவு எண்ணாக டிக்ஸன் பயன்படுத்தி உள்ளார்.
"நான் இந்த இலக்கங்களை விண்டோரியோ சீட்டெடுப்பில் பயன்படுத்தி வந்தேன் பின்னர் அதே இலக்கங்களை லோட்டோ சீட்டெளிப்பிற்கும் பயன்படுத்தினேன், இது எமது குடும்பம் தொடர்பில் நினைவில் வரும் ஒர் திகதியை மையமாகக் கொண்ட இலக்கங்கள் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
லொத்தர் சீட்டில் பரிசு வென்றுள்ளதாக தனது மனைவிக்கு கூறிய போது அவர் 20,000 டாலர்களை வெல்லப்பட்டுள்ளது எனவே கருதியதாகவும், 20 மில்லியன் வென்றதாக அவரால் நம்ப முடியவில்லை எனவும் டிக்சன் கூறுகின்றார்.
தான் மனைவியை ஏமாற்றுவதாகவே முதலில் மனைவியை கருதினார் என டிக்ஸன் குறிப்பிடுகின்றார்.
கடையென்றில் இருக்கும் போது லொத்தர் சீட்டு பரிசு வென்றவர்கள் பற்றிய விவரங்கள் வெளியானதாகவும் கடையில் பணியாற்றிய நபர் ஒருவர் லொத்த சீட்டு இலக்கங்களை பரீட்சித்து தாம் பரிசு வென்றுள்ளதாக கூறினார் எனவும் தெரிவித்துள்ளார்.
தான் பரிசு வென்றது அறிந்து கொண்ட கடையின் வாடிக்கையாளர்கள் அனைவரும் தமக்கு வாழ்த்து கூறியதாகவும் கூறுகின்றார் லோட்டோ பரிசளிப்பு