சடலத்துடன் உறவு... கனடாவை உலுக்கிய சம்பவத்தில் இளைஞர் இருவரின் ஒப்புதல் வாக்குமூலம்
ரொறன்ரோவில் வீடு புகுந்து கொள்ளையிட்ட இளைஞர்கள் இருவர் மூன்று பிள்ளைகளின் தாயாரை கொடூரமாக தாக்கி, துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
ரொறன்ரோவின் கிழக்கு யார்க் பகுதியில் கடந்த 2018ல் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் கைதாகியுள்ள இளைஞர்கள் இருவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் வெளியான தகவல் நடுங்க வைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 மே 25ம் திகதி நண்பரின் உணவ திறப்பு விழாவுக்கு சென்ற Gerald Aquintey நள்ளிரவு கடந்த நிலையில் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார். இரவு 9 மணியளவில் மனைவி Rhoderie Estrada(41)ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் தாமதமாக வீடு திரும்ப இருப்பதையும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சுமார் 2 மணிக்கு குடியிருப்புக்கு திரும்பிய ஜெரால்ட் படுக்கையறையில் கண்ட காட்சிகள் மொத்தமாக அவரை உலுக்கியுள்ளது.
இரத்தத்தில் குளித்த நிலையில் உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார் Rhoderie. அரை நிர்வாண கோலத்தில், தலை மற்றும் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது.
உடனடியாக 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னர் Rhoderie மரணமடைந்துள்ளார்.
இந்த வழக்கில், அடுத்த 24 மணி நேரத்தில் ரொறன்ரோ பொலிசார் Yostin Murillo(22) மற்றும் David Beak(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்திலேயே, அந்த தாயார் கொடூரமாக தாக்கப்பட்டதும், குற்றுயிராக கிடந்த நிலையில் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 25 ஆண்டுகளுக்கு பிணையில் விடுவிக்க வாய்ப்பில்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.