ஒன்ராறியோவில் பொலிஸ் வேடமணிந்தவர்களால் பெண் ஒருவர் கடத்தல்!
கனடாவின் ஒன்ராறியோவின் வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிற்கு பொலிஸ் வேடத்தில் சென்ற மூவரால், பெண்ணொருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான எல்னஸ் ஹாஜிடமிரி என்ற பெண்ணே இவ்வறு கடந்தவாரம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். பொலிஸ் வேடத்தில் சென்றவர்கள், அப்பெண்ணை கைது செய்து விசாரணை செய்ய கூட்டி செல்ல வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அந்த குடியிருப்பின் உரிமையாளர் உடனடியாக போலீஸ் அவசர உதவி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட பொலிஸ் வேடமணிந்த அந்த மூவர் கும்பல் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை வெள்ளை நிற SUV வாகனம் ஒன்றில் கடத்தி சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரித்து வரும் பொலிசார், #BringElnazHome என்ற ஹாஷ்டேக் மூலம், கடத்தப்ப்பட்ட பெண் தொடர்பிலான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
