ரெயிலுக்காகக் காத்திருந்தபோது தீடீரென தள்ளிவிடப்பட்ட பெண்; வெளியான பகீர் காணொளி
பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரின் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏராளமானோர் ரெயிலுக்காகக் காத்திருந்தபோது நடைமேடையில் பெண் ஒருவரை , பின்னாலிருந்து வரும் ஒரு நபர், தண்டவாளத்தை நோக்கி தள்ளிவிடும் அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலைகுலைந்த அப்பெண், எவ்வித எதிர்ப்போ, தற்காப்பு முயற்சிகளோயின்றி தண்டவாளத்தில் விழுகிறார். அவ்வளவுதான் கண் இமைக்கும் நேரத்தில், அவளருகே அவர் எதிர்பார்த்துக் காத்து நின்ற மெட்ரோ ரயில் வந்துவிட்டது.
Tentative de meurtre dans la station de métros Rogier à Bruxelles, ce vendredi, peu après 19 h 40.
— Infos Bruxelles?? (@Bruxelles_City) January 14, 2022
Le conducteur de la Stib est heureusement parvenu à effectuer un freinage d’urgence et il a ainsi pu éviter le pire in extremis.https://t.co/R9Vp6poSE0 via @sudinfo_be pic.twitter.com/4tIwpbGgrT
நல்ல வேளை அந்த ரயிலின் அவசரகால பிரேக்குகள் வெகுச் சிறப்பாக வேலை செய்ததால், அப்பெண்ணுக்கு மிகவும் அருகாமையில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு, ஓடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.