பிறந்து 8 நாட்களேயான குழந்தையை கடத்திய பெண்: எச்சரிக்கை செய்தி
மேற்கு ஒட்டாவா பகுதியில் பெண் ஒருவர் பிறந்து 8 நாட்களேயான பிஞ்சு குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை முன்னெடுத்துள்ள ஒட்டாவா பொலிசார், அந்த பெண் மீது 10 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.
அன்னையர் தினத்தன்றே தொடர்புடைய குழந்தை கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்மணிக்கும் குழந்தையை பறிகொடுத்த தாயாருக்கும் சமூக ஊடகம் வாயிலாக அறிமுகம் இருந்து வந்துள்ளது.
இருவரும் அடிக்கடி சமூக ஊடகத்தின் சேட் குழுக்களில் கலந்து கொண்டு பேசியும் வந்துள்ளனர். இதனால் குழந்தை பிறந்த தகவலும் குறித்த பெண்ணுக்கு தெரிய வந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று, தமக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகவும், நேரில் சந்தித்து பரிசு தர இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி மேற்கு ஒட்டாவா பகுதியில் அமைந்துள்ள அந்த தாயாரின் குடியிருப்புக்கு ஞாயிறன்று சென்ற அவர், bear spray பயன்படுத்தி குட்டியிருப்பில் இருந்த அனைவரையும் தாக்கியுள்ளார்.
பின்னர் பச்சிளம் குழந்தையுடன் மாயமாகியுள்ளார். திடீரென்று பக்கத்து வீட்டில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர், சுதாரித்துக் கொண்டு அந்த தாயாரின் குடியிருப்புக்கு வந்த நிலையில், பச்சிளம் குழந்தையுடன் குறித்த பெண்மணியை பார்த்துள்ளனர்.
இதில் சந்தேகமடைந்த ஒருவர், குழந்தையுடன் தப்பிக்க முயன்ற அந்த பெண்மணியை தடுத்தி நிறுத்தியதுடன் பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் அவரை கைது செய்ததுடன், குழந்தையையும் மீட்டுள்ளனர்.