சாலையில் நடந்த துயரம்: பெண் மீது வழக்கு
வடக்கு யார்க்கில் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், டஃபெரின் தெரு மற்றும் ரானீ அவென்யூ சந்திப்பில் இரவு 11 மணியளவில் வேனும் மோட்டார் சைக்கிளும் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிள் பயணி படுகாயமடைந்த நிலையில் சமபவயிடத்தில் மரணமடைந்துள்ளதாக ரொறன்ரோ அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது விசாரணை கட்டத்தில் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் மீது மோதிய அந்த வேன் சாரதி, சம்பவயிடத்தில் இருந்து உடனையே மாயமாகியுள்ளார்.
ஆனால் ஒரு கிலோ மீற்றர் தாண்டி ஒரு குடியிருப்பு பகுதியில் வைத்து அவரை அடையாளம் கண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, 28 வயதான அந்த பெண் மீது வழக்கு பதிந்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.