30 ஆண்டுகளுக்கு முன் உதவிய செவிலியரை தேடிக் கண்டுபிடித்த பெண் செய்த அரிய செயல்
கனேடிய பெண் ஒருவர், 30 ஆண்டுகளுக்கு முன் மரணப்படுக்கையிலிருந்த தன் கணவருக்கு உதவிய செவிலியர் ஒருவவரைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த கொரோனா மக்களை வீடுகளுக்குள் முடக்கிவிட்டாலும், சில நல்ல விடயங்களையும் செய்யத்தூண்டியுள்ளது.
பலரும் தங்கள் அன்பிற்குரியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அளவளாவிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் தூரத்து உறவுகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
கனடாவில், ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒரு பெண், 30 ஆண்டுகளுக்கு முன், தன் கணவர் மரணப்படுக்கையிலிருக்கும்போது அவருக்கு உதவிய ஒரு செவிலியரைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்.
ஒன்ராறியோவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் தன் கணவரை அனுமதித்திருந்தார் Terri Lacroix. ஆனால், 24 மணி நேரத்துக்குள்ளாக நிலைமை மோசமடைந்து Terriயின் கணவர் உயிரிழந்துவிட்டார்.
அன்று முழுவதும் ஒரு இளம் செவிலியர் Terriயுடன் அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா காலகட்டம் மக்களை வீடுகளுக்குள் முடக்கிப்போட, தனக்கு ஆறுதலாக இருந்த அந்த செவிலியரின் நினைவு Terriக்கு வந்திருக்கிறது.
பேஸ்புக் பக்கம் ஒன்றைத் துவக்கி, பெயர் கூட நினைவிலில்லாத அந்த செவிலியரைத் தேடத் துவங்கியுள்ளார் Terri. ஆனால், ஆச்சரியப்படத்தக்க விதமாக, சில நாட்களுக்குள்ளேயே Cathy Duguay என்ற செவிலியரிடமிருந்து பதில் வந்துள்ளது Terriக்கு.
ஓய்வு பெற்றுவிட்ட Cathy, தற்போது கொரோனா தடுப்பூசி கிளினிக் ஒன்றில் பணியாற்றி வருகிறார். 30 ஆண்டுகளுக்கு முன் கணானை இழந்து சோகத்தில் ஆழ்ந்திருந்த தனக்கு ஆறுதலாக இருந்ததற்காக, Cathyக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார் Terri.
ஓய்வு பெற்ற நிலையில், இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை எதிர்பாராத Cathyயும் நெகிழ்ந்து போயுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததும், சந்தித்து, ஒன்றாக தேநீர் அருந்துவது என முடிவு செய்துள்ளார்கள் Terriயும் Cathyயும்!